Thursday, January 27, 2011

நான் பாருக்குப் போகிறேன் குடிக்க.

ஆகச்சிறந்த கடவுளை
ஆகச்சிறந்த பிரதியொன்றில் படைத்திருந்தேன்
இறுதிப் பக்கத்தில் அவனை
என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கையில்
பாரசீக நாட்டின் பாலியல் தொழிலுக்கு
அடிமைகளை ஏற்றுமதி செய்யும் வியாபாரியொருவன்
எதேச்சையாய் வழியில் பார்த்துவிட்டுக் கேட்டான் 
எனக்குத் தருவாயா... எவ்வளவு விலையென்றாலும் பரவாயில்லை
பிளாங்க் செக் தருகிறேனென்றான்
ஒரு பாட்டில் ரெமி மர்ட்டினுக்கான விலைமட்டும் போதுமென்றேன்
ஆச்சர்யத்துடன் அவ்வளவுதானா என்றான் நம்பமுடியாமல்
மேலும் ஏதேனும் தர விருப்பமெனில்
நீ அணிந்திருக்கும் லூயிஸ் வூட்டன் (louis vuitton ) உடையும்
உன்கையில் புகைந்துகொண்டிருக்கும் சுருட்டும் போதுமென்றேன்
அதிர்ஷ்டத்தை தந்த கடவுளை மேல் நோக்கி வணங்கிவிட்டு
கடவுளை இழுத்துக் கொண்டு போனான் சங்கிலியால் பிணைத்து
விடைபெறுமுன் கடவுள் கத்தினார்
என்னை கைவிட்டுவிட்டாய்
படைப்பில், படைத்தவனுக்கே துரோகம் செய்துவிட்டாய்
நிச்சயம் நீ நரகத்துக்குத்தான் போவாய்
எல்லா விரல்களையும் எனைப்பார்த்து மடக்கி
நடுவிரலை மட்டும் உயர்த்தி
கடவுளுக்குக் காட்டி விட்டு
நான் பாருக்குப் போகிறேன் குடிக்க.

6 comments:

விஜய் said...

ரோபோ கடவுளா நண்பா !!!

வாழ்த்துக்கள்

விஜய்

கோநா said...

@விஜய்
நண்பா, நன்றிகள்

தங்கராசு நாகேந்திரன் said...

pin navinaththuva kavithaya ithu

கோநா said...

terilinkale thankaraasu. varukaikku mikka nanri.

ஹேமா said...

படைத்தவ்னே படும்பாடு பாவம் !

கோநா said...

hema, தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக நன்றிகள் .