Monday, January 3, 2011

கதை தெரியாத காட்டின் கதை

ஒரு பெரிய காடு இருந்துச்சாம் 
காட்ல ஒரு சிங்கமிருந்துச்சாம்
அப்றம் ஒரு புலி இருந்துச்சாம் 
குரங்கு இருந்துச்சாம் 
நரி இருந்துச்சாம் 
மான் இருந்துச்சாம் 
முயல் இருந்துச்சாம் 
யானை  இருந்துச்சாம்     "ப்பா...ம்"   
பூனை  இருந்துச்சாம்    "ம்மியாயாவ்" 
எல்லாம் என்ன செய்தன, 
என்ன கதை
என்பதெல்லாம்    தெரியாததால் 
எதுவும் சொல்லவில்லை
எதையும் 
அவளும் கேட்கவில்லை
உறங்கிவிட்டிருந்தாள். 


அப்றம் எல்லாம்
நைட்டு  சாப்ட்டு
சமத்தா தூங்கிடுச்சாம்
என கதையை முடித்து
கன்னத்தில் முத்தமிட
உறக்கத்தில் சிரிக்கிறாள்   ஓவியா.

-நன்றி திண்ணை வார இணைய இதழ்.