Tuesday, January 4, 2011

நந்தலாலா விமர்சனமும் சாருவின் தரங்கெட்ட அரசியலும்-பகுதி 4- மப்பு, நட்பு, தப்பு

மப்பு, நட்பு, தப்பு 

ஒரு ஆகச் சிறந்த படைப்பாச்சும் படைக்காத ஒருத்தரோட விமர்சனத்த நிராகரிச்சுடலாம்னு தெரிதாவோ, தெரிலியாவோ {யாருன்னு கண்பார்மா தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படறவங்க சாருவுக்கோ, எஸ்ராவுக்கோ, ஜெமோவுக்கோ, அவங்க வலைத்தளத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்டிங்கன்னா கரெக்டா சொல்லி வெளக்குவாங்க}சொல்லியிருக்காங்களாம். அதனால நீங்க யாருவேணா என் விமர்சனத்த நிராகரிச்சுட்டு எஸ்ராவோட பேசத்தெரிந்த நிழல்களோ, மனுஷ்யப்புத்திரனோட என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோமோ, சாருவோட சரசம்,சல்லாபம், சாமியாரோ விட்ட இடத்திலிருந்து படிக்கப் போலாம், இல்லேன்னா ஆதித்யா சேனல்ல வடிவேலோட கைப்புள்ள காமெடி பாக்கப் போலாம். இது எல்லாமே சலிச்சு போயி கொஞ்சம் ஒடம்புல சொரண மிச்சமிருந்தா மேற்கொண்டு
இந்த கட்டுரைய படிக்கலாம்.
       இப்பதான் எலக்கியம் எழுத, படிக்க ஆரம்பிச்சுருக்கிற ஜீரோ டிகிரி படிச்ச முனியாண்டி பூனையான நான் எதுக்கு புத்தக வெளியீட்டு விழாவுக்கே ரெண்டு லட்சம் செலவு பண்ணி, அதுக்கு 1000௦௦௦ பேர் வந்த, பன்னிக்குட்டி மாதிரி 7 புத்தகங்கள ஒரே நேரத்துல ரிலீஸ் பண்ற, போஸ்டருக்கு பீர்ல அபிசேகம் பண்ற புத்திசாலி ரசிகர்கள்(?) இருக்கிற சாரு என்கிற,தமிழ்நாட்டுல தவறிப் பொறந்திட்ட ஒரு ஜீனியஸ் நவீனத்துவ, பின்நவீனத்துவ, ஊசி நவீனத்துவ, ஊக்கு நவீனத்துவ, ஜாக்கெட் நவீனத்துவ... வேண்டாம் இது இப்படியே நீண்டுட்டே போய் எங்க முடியும்னு சாரு புத்தகங்கள ரெகுலரா படிக்கற உங்களுக்கே நல்லாத் தெரியும் மேலும் அவர் மாதிரி பச்சையா எழுதற அளவுக்கு நான் இன்னும் பின் நவீனத்துவ எலக்கிய எழுத்தாளன் ஆகலேங்கறதால இதோட நிறுத்திக்குவோம். ...ஊக்கு...ஜாக்கெட் நவீனத்துவ எழுத்தாளர விமர்சனம் பண்ணி, "யாருமே இல்லாத டீக்கடையில யாருக்கடா டீ  ஆத்தறே, உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடான்னு" அடிவாங்கிட்டு விவேக் பார்த்து புலம்பற அந்த டீக்கடை சிங்கு மாதிரி யாருமே பாக்காத என் ப்ளாக்குல எதுக்கு எழுதணும்?
         காரணம் இருக்கு பாஸ்... கடமை & நிலைமை.
       சாருங்கற எலக்கிய   யானை பண்ற அநியாயத்த மத்த எலக்கிய யானைங்களோ, சிங்கம், புலி, கரடி, முயல், காட்டெருமை, ஏன் நம்ம பெரிய காடோ கூட கண்டுக்காம, கம்முனு அவங்கவங்க வலைத்தளத்துல ஆண்டிபட்டி, ஆட்டையாம்பட்டி வாசகனோட
எலக்கியச் சந்தேக மின்னஞ்சல்களுக்கு பொறுப்பா பதில் அனுப்பிச்சுட்டு பிசியா இருக்கிறதனால இந்த முனியாண்டியோட பூனை ம்மியாவ்  , ம்மியாவ்வுனு கத்திச் சொல்ல வேண்டியதாகிடுச்சு.
       கலைஞர குடும்பத்தோட போட்டுத் தாக்கறது, கமல குனியவச்சு கும்மாங்குத்து குத்துறது, அப்பப்ப உத்தமத் தமிழ் எழுத்தாளன ஊசியால குத்தறது, பழைய ஆன்மீக குரு நித்தியோட ஆசிரம இரகசியங்கள கிரைம், குஜால் கலந்து காரம் மணமோட தர்றது, இப்ப லேட்ட்ஸ்டா மிஸ்கினோட ஆப்டர் மப்பு ஒளறல் இரகசியங்கள வெளியிடறதுன்னு பயங்கர பிசியா இருக்கிற ஒலகப்பட விமர்சகர், பின்நவீனத்துவ எலக்கிய ,கலகக்கார எழுத்தாளர், சாருகிட்ட சில விசயங்கள் நான் கேட்கணும். அந்த விசயங்கள எதாவது ஒரு எலக்கிய யானையோ, சிங்கமோ, நரியோ, காடோ நியாயத்த உணர்ந்து சாருவப் பார்த்து கேட்டா எனக்கு கொஞ்சம் நிம்மதியும், சந்தோசமும் கிடைக்கும். நாம் பாட்டுக்கு நாராயணா, நாராயணான்னு சொல்லிட்டு எம் பிளாக்குல எலந்தப் பழம் கொழந்த முகம்னு கவிதை எழுத ஆரம்பிச்சுடுவேன்.
       அய்யா உங்கள மாதிரியே நானும் சாருவோட ஜீரோ டிகிரி, ராசலீலா, மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்னு படிச்சுருக்கேன், வியந்திருக்கேன், வேர்த்திருக்கேன், ரசிச்சுருக்கேன், அப்புறம் கையடிச்சு இத சத்தியமும் பண்றேன். வேற என்ன பிரச்சனை?
      நந்தலாலான்னு வந்த படத்தப் பத்தி மிஸ்கினோட நண்பனா, இந்தியாவிலேயே நடுநிலையோட செய்திகள தர்ற பத்திரிகை நாங்கன்னு தலயங்கத்துலேயே பெருமை பீத்திக்கிட்ட ஒரு மாத பத்திரிக்கையில சாரு எழுதுன ஒலக விமர்சனம்தான் பிரச்சனை.
அதோட சாராம்சம் இதான், நந்தலாலா
    1.வெறுப்பைக் கடக்கும் அன்பின் வெளிச்சம்.
    2. இந்தியாவுல இதுவரைக்கும் இந்தளவுக்கு ஒரு சிறந்த படம் கூட வந்தது கிடையாது.
    3. சேக்ஸ்பியரோட காவியங்களுக்கு இணையானது.
    4.கிக்குஜீரோவோட காப்பிகிடையாது, அதவிட பலமடங்கு உயர்வானது.
    5. மிஸ்கின் ஒரு ஆட்டியர்.{பிரெஞ்சு வார்த்தை}        
    6.ஒலக க்ளாசிக்குகள்ள 20 ல ஒண்ணா இத தாராளமா சொல்லலாம்.
    7. தமிழ் வாழ்க்கைய, தமிழன பத்திப் பேசற மொதல் தமிழ் படம்.
    
     நீங்க எல்லாரும் நந்தலாலா படம் பார்த்துருப்பீங்க, நெறைய விமர்சனமும் படிச்சுருப்பீங்க, நெறைய ஒலகப் படங்களையும், எதார்த்த படங்களையும் பார்த்துருப்பீங்க உங்க மனசாட்சிய தொட்டுச் சொல்லுங்க உங்களுக்கு நந்தலாலா பார்த்தப்ப என்ன தோணுச்சு?
     காப்பி\ தழுவல்னாலும் பரவால்ல,  நெறைய கொறைகள் இருந்தாலும் பரவால்ல, தமிழ்ல வர்ற பெரும்பாலான மொக்கைப் படங்களுக்கு இது எவ்வளவோ மேல், மிஸ்கின் முயற்சிய வரவேற்கலாம், பாராட்டலாம்னு எனக்குத் தோணுன மாதிரி உங்கள்ள யார் யாருக்கெல்லாம் தோணுச்சோ அவங்க சட்டைய புடிச்சுக் கேட்கிறேன்
   இவ்ளோ ஒலகத் திரைப் படங்களா பார்த்த, விமர்சனம் பண்ணுன அனுபவமும், இருக்கிற சாரு, நந்தலாலாவ மினிமம் மூணு முறை பாத்துட்டு அது,
   -கிக்குஜீரோ காப்பியில்லேன்னு சொல்லலாமா?
   -உலகத் தரமான, எதார்த்தமான படம்னு சொல்லலாமா? 
   -சேக்ஸ்பியரோட காவியங்களுக்கு இணையானதுன்னு சொல்லலாமா?
   -இந்தியாவுல இதுவரைக்கும் இந்த அளவுக்கு சிறந்த படம் வரலேன்னு                                                                         சொல்லலாமா?
   -மிஸ்கின ஆட்டியர்னு சொல்லலாமா?
   -தமிழனோட வாழ்க்கைய அப்படியே பதிவுசெஞ்சிருக்கிற முதல் படம்னு சொல்லலாமா?
    ...கூடாதுன்னு சாருவுக்கே நல்லாத் தெரியும்{என் பார்வையில் ஏன் கூடாதென்பதற்கான காரணங்களை நந்தலாலா குறைகளும், லாஜிக் ஓட்டைகளும் என்ற முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன்}
     மிஸ்கின் அவர் நண்பர் என்பதற்காகவும், நண்பர் படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காகவும், விமர்சனம் என்ற அவருடைய கூரான, அனுபவம் வாய்ந்த அறுவைச் சிகிச்சை கத்தியை தவறான முறையில் கையாண்டு, நந்தலாலாவுக்கு பொருந்தாத உலக கிளாசிக் \ எதார்த்தப் படம் என்ற செயற்கை உறுப்பை {சாருவின் பாணியில் குறியொன்றை என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்} பொருத்தி ரசிகர்களை    ஏமாற்ற எழுதியுள்ளார் அந்த மாத இதழில்.      
    செயற்கை உறுப்பு பொருந்தாமல் அழுகி படம் பப்படமாகி, பாட்ஷா போல் ஓடாமல் பாச்சை போல் ஓடி ஒளிந்துகொண்டது.
     நந்தலாலா படத்துக்கு சாரு எழுதியது சுய சார்புள்ள, தன்நல நோக்குடைய, வியாபார நோக்குடைய, வளைக்கப் பட்ட, உண்மைக்குப் புறம்பான விமர்சனம். தார்மிகமாக அவர் இதற்கு வாசகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இனிமேல் அவர் எந்த படங்களுக்கும்{அது எத்தியோப்பிய படமாக இருந்தாலும் சரி} விமர்சனம் எழுதக் கூடாது.
       இந்த விமர்சனத்தை வெளியிட்டதன் மூலம் நடுநிலையை இழந்துவிட்ட அம்மாத இதழின் ஆசிரியர் அவ்விதழை ரூ 20 கொடுத்து வாங்கிய என் போன்ற நடுநிலையான உண்மையான செய்திகளை எதிர்பார்க்கும் வாசகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
        இந்த மேட்டர கடுப்பாகி யோசிச்சுட்டு சட்டுன்னு எழுதவும் முடியாம, யாருமே கேட்காததால நமெக்கெதுக்குடா வம்புன்னு விடவும் முடியாம அல்லாடிட்டு என் நண்பரும், சக வலைபதிவருமான ராஜாகிட்ட  சொன்னா, அவரு "அட சாரு எப்பவும் இப்படித்தான், யாரும் அவர கண்டுக்க மாட்டாங்க, நீ இதுக்கெல்லாம் புதுசுல்ல அதன் உணர்ச்சிவசப்படற, சாரு மிஸ்கினோட யுத்தம் செய் படத்துல நடிக்கிறாரு, அதான் இப்படி மிஸ்கின அவர ...ட்டுத் திரியறாரு, லேட்டஸ்ட் நியூஸ் என்னன்னா புத்தக வெளியீட்டு விழாவுல அவருக்கும், மிஸ்கினுக்கும் முட்டிகிச்சாம் அவர் வலைத்தளத்துல மிஸ்கின திட்டி எழுத ஆரம்பிச்சுட்டாராம், நீ அதையும் படிச்சுட்டு அப்றமா கட்டுரை எழுது" ன்னு சொன்னாரு.
        அங்க போனா ஏதோ உலக அழகி படம் மாதிரி close upல யாரு... நம்ம சாரு போட்டோதான், அடங்கப்பான்னு உள்ள போனா செம காமெடி & கடுப்பு.
        அந்தக் கருமத்தையெல்லாம் அடுத்த பதிவுல தனியா போடறேன், ஏன்னா அல்ரெடி நீளமான பதிவாயிடுச்சு.                                                                                                                                                                                 

No comments: