Monday, January 3, 2011

ஆடை துறந்த ஞானி

அஞ்சு வயசாகுது 
ட்ரஸ்சே போட்டுக்க மாட்டேங்கறா... 
எம் மாமிய என்னத்  திட்றா,
என்ன புள்ள வளத்துருக்கேன்னு... 

பக்கத்து  வீட்டக்கா
பிராது கொடுத்தாள்
கண்ணாமூச்சி ஆட்டத்தோழியை
கண்டித்தேன் அழைத்து

வெட்கமாயில்லையா  உனக்கு 

அழகாய் சிரித்துக் கொண்டே
ஆடை துறந்த ஞானியென
அமைதியாய் திருப்பிக் கேட்டாள்

வெட்கமாயில்லையா  உனக்கு 

ச்சே...
ரொம்ப வெட்கமாய் போய்விட்டது.  

-நன்றி  திண்ணை வார இணைய இதழ்.

No comments: