Thursday, January 13, 2011

நீங்கள் ஒரு கொலைகாரன்...

நீண்ட நாட்களுக்குப்   பிறகு 
நெருங்கிய நண்பரொருவரின்
நெருங்கிய நண்பரைப் பார்த்தேன்
எனக்கு தூரத்து நண்பர் முறை 
முகத்தில் நீண்ட தாடியும் 
முறுக்கிய மீசையும்
விழிகளில் ஒளியுமாய்  இருந்தவரிடம் 
நீங்கள் ஒரு கொலைகாரன்...
உங்களையே கொன்று விட்டீர்கள்  என்றேன்
சிரித்துக்கொண்டே மௌனமாயிருந்தார்
கண்டுபிடித்துவிட்டேனென்ற
கர்வம் தாங்கவில்லை எனக்கு.  

8 comments:

Philosophy Prabhakaran said...

ம்ம்ம் நல்லாருக்கு... தூரத்து உறவினர் கேள்விப்பட்டிருக்கிறேன்... அது என்ன தூரத்து நண்பர்...

Cable சங்கர் said...

நல்லாருக்கு..

svramani08 said...

'தூரத்து நண்பர்முறை "
வித்தியாசமான சிந்தனை
வாழ்த்துக்கள்

கோநா said...

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி cable sankar

கோநா said...

svramani08 , தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

கோநா said...

philosophy prabhakaran தூரத்து உறவினர் போலத்தான், நண்பரின் நண்பர் எனக்கு தூரத்து நண்பர் தானே....
தொடர் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

Gowripriya said...

தூரத்து நண்பர்

:)))

கோநா said...

வருகைக்கு மிக்க நன்றி கௌரி.