Saturday, January 8, 2011

காமக் கடுங் கானல்.

இந்தவார ஆனந்தவிகடனில் வெளியான எனது கவிதை 

மெல்லிய குறுந்தகடிலிருந்து
வெளிவந்து புரிந்த 
தூரதேசத்து
ஆண்கள், பெண்களின்
நீண்ட கலவிகளில்
கலந்திருந்தேன்
கவுரவ விருந்தினராக.
இரு வெள்ளைப் பெண்களும்
ஒரு கருப்பு இளைஞனும்     
உச்சத்தை நெருங்கிய கணத்தில்
சட்டென மறைந்தனர் 
மின்சாரவேகத்தில்.

காற்றில் கரைந்திருந்த 
கலவிகளின் ஒலிகளுடனும்
கனவுகளில்  மிதந்த 
கலவிகளின் நினைவுகளுடனும்
நிகழ்ந்து முடிகிறது 
தவறவிட்டுவிட்ட ஒரு
தனிமையின் உச்சம்.

-நன்றி 12 -01 -11ஆனந்த விகடன் வார இதழ்

-நன்றி பதிவுகள் மாத இணைய இதழ் 
.

6 comments:

Priya said...

கவிதை நன்றாக இருக்கிறது... ஆனந்த விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!

கோநா said...

தொடர் வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி அரசன்.

முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ப்ரியா.

அன்புடன் நான் said...

பாராட்டுக்கள்.

விஜய் said...

இந்த வார விகடனில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை

யதேச்சையாக தேனக்காவின் தளத்தில் உங்களது பின்னூட்டம் பார்த்து வந்தேன்.

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

கோநா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி விஜய். நண்ப, தங்களின் சொல்லாட்சி நான் கற்று அடைய வேண்டிய ஒன்று.

கோநா said...

அரசு அவர்களுக்கு, வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி,