Monday, December 20, 2010

கடவுள் பைத்தியம்

சுருண்டு படுத்து
கடிக்கும் கொசுக்களுடன்,  
அடிக்கும் குளிர்மழையுடன்
போராடி
 உறங்க முயன்று...
பின்னிரவில் கண்ணசந்தவனை
தட்டியெழுப்பிப்  போகிறது
ரோந்து வாகன சைரன் ஒலி.

துணி மூட்டையில்
தலைவைத்துப் படுத்திருந்த
வீதியோரத்து   பைத்தியம்
காறிக்   காறி
வானத்துள் துப்புகிறான்
தூக்கங்கெட்டு.

நரகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு
வேர்த்துக் களைத்து
சொர்க்கத்துள்   நுழைந்த கடவுள்
கைக்குட்டை தேடுகிறான்
முகந்துடைக்க.   

-நன்றி திண்ணை இணைய இதழ் 

No comments: