Tuesday, September 14, 2010

சாலைவிதி

அண்ணாநகரின்
ஐந்தாவது குறுக்குத் தெருவில்
பைக்குடன் விழுந்தபோதுதான் தெரிந்தது
பாதசாரிகள் சாலையில்
இடப்புறம்தான் செல்லவேண்டுமென்பது கூட
இன்னுஞ்சில
எருமைகளுக்குத் தெரியாதென்பது

No comments: