Wednesday, October 27, 2010

ருத்ரதாண்டவம்

வாகனங்களின் நெரிசலில்
வழிகேட்டு ஊர்ந்தபடி
ஒரு தெருவில்
சவ ஊர்வலம்
மறு தெருவில்
சிவ  ஊர்வலம்

உறவுகள் அழுது  திரும்பிய
ஊரடங்கி ௨றங்கிய
பின்னிரவின் ஜாமத்தில்
நாடகம் முடிந்த களிப்பில்
வேடம் கலைத்து
இருவரும் இணைந்து
ஆனந்தத்தில்
ஆடிக்கொண்டிருக்கக் கூடுமொரு
ருத்ரதாண்டவம்
எரிந்து முடிந்து
கனன்று கொண்டிருக்கும்
கொள்ளிக்கட்டைகளின்
இளஞ்சிவப்புக்
கங்குகளின் வெளிச்சத்தில். 

-நன்றி திண்ணை இணைய இதழ்  
  

5 comments:

Anonymous said...

ஹர..ஹர..ஹர..ஹர..மகா தேவ்..!

வேணு வேற்றாயன் said...

powerful visual,

கோநா said...

thanks pasupathi,
thanks venu.

மதி said...

பல படிமங்களில் சிந்திக்க வைத்த கவிதை இது .. நன்று

கோநா said...

nanri mathi.