Sunday, October 24, 2010

கங்காரு குப்பைத் தொட்டியும் உங்கள் குழந்தைகளும்

சிரிக்கும் விழிகளுடனும்
மலர்ந்த இதழ்களுடனும்
அணைக்க அழைக்கும்
விரிந்த கரங்களுடனும்
பொதுஇடங்களில் நிற்பவைகளின்
இதழ்களுக்குள் துப்பிவிட்டும்
நெஞ்சுக்குள் குப்பைகளை எறிந்துவிட்டும் கடந்துசெல்லும்
உங்களை
கவனித்துக்கொண்டுதான்
உடன் வருகிறார்கள்
விலங்குகளையும் பொம்மைகளையும்
உயிராய் நேசிக்கும்
உங்கள் குழந்தைகள்.

-நன்றி திண்ணை இணைய இதழ்  
       

No comments: