Wednesday, October 27, 2010

மழை விதைத்தவை

இரவு பெய்த மழை 
சாலையில் குழிகளை 
துளி ஏருகளால்
உழுது சேறாக்கி
ஒவ்வொன்றிலும் 
விதைத்துச் 
சென்றிருக்கிறது 
ஒரு நிலவையும் 
சில நட்சத்திரங்களையும்.  

4 comments:

Raja said...

கவிதை அழகு...வாசிப்பவர் நெஞ்சிலும் நிலவு நட்சத்திரங்களை விதைத்துவிடும்...

Anonymous said...

ஒரு நிலவையும்
சில நட்சத்திரங்களையும்.
கூட உங்கள் கவிதையையும்..

வருணன் said...

நண்பா மிக அழகான ரசனை மிகுந்த பார்வை தங்களுக்கு. நேர்த்தியான சொல்லாடலும் கூட...

எனது வலைப்பூவில் தங்களின் தொடர் வருகைக்கு சாட்சியாய், பல பின்னூட்டங்களை பார்த்தேன். நன்றிகள் பல...

இன்னும் கவி பல புனைய வாழ்த்துக்கள்.

கோநா said...

மிகவும் நன்றி றாஜா, பசுபதி,வருணன்.