Sunday, November 21, 2010

சற்றுமுன் பெய்தமழை.

தெருவெங்கும் குழிகளை 
தெளிந்த வானத்தையும் 
கொஞ்சம் மேகத்தையும் 
நிரப்பி
சாலையை சீர்செய்துள்ளது 
சற்றுமுன் பெய்தமழை.
 பாதசாரிகள் 
வாகன ஓட்டிகள் 
பார்த்துச் செல்லுங்கள் 
பறந்து கடந்திடும்
பறவைகளை மிதித்துவிடாமல் 
விமானங்களில் மோதிவிடாமல் 
தவிர...
நீங்கள் 
தவறிவிழுந்துவிடவும் கூடும் 
தரையில்லா 
பிரபஞ்சப்பெருவெளிக்குள்
பூமியைச் சுற்ற
இன்னொரு நிலவாய்.
   
          

1 comment:

Raja said...

அழகு...வெகு அழகு...