Sunday, November 21, 2010

சிநேகமாதல்

முன்னிருக்கையில் பெண்
புட்டாய்
அழகாயிருந்தாள்
அம்மாவுடன்
அமர்ந்திருந்தவள்
எதேச்சையாய்
என்னைப்பார்க்க
முழிபிதுக்கி
மூக்குவிடைத்து
நாக்குதுருத்தி
கைவிரல்களை
கொம்புகளாக்கி
அழகு காண்பிக்க
உடனே சிரித்தாள்.

சிநேகமாகிவிட்ட
சந்தோசத்தில்
இயல்பாகி
இலேசாய்   சிரிக்க
உடனே அழுதவள்
திரும்பிக்கொண்டாள்.

அவள் அம்மாவிடம்
என்னவச்சு
காமெடி   கீமெடி
பண்ணிட்டாளோயென்று
இன்றுவரை
உறுதியாய்தெரியவில்லை. 


-நன்றி பதிவுகள் மாத இணைய இதழ் 
 

1 comment:

Raja said...

இது பிரமாதமாயிருக்கிறது....