Saturday, May 14, 2011

புறக்கணிக்கப்பட்ட பொறிகள்.



பறவைகள் அரிதான
நகரத் தெருக்களில்
திடும்மெனத் தென்படுகின்றன
புறக்கணிக்கப்பட்ட பொறிகள்.

உடைந்தும்
அழுக்கேறியும்
தனிமை சூழ்ந்தும்
குப்பைத்தொட்டி ஓரங்களிலும்
இருண்ட சந்துகளிலும்
கைவிட்ட கடவுள்களை   
மௌனமாய் வெறித்துக்கொண்டும்.   

சுமந்த பாரங்களை
இருந்த உறவுகளை
இழந்த பெருமைகளை
இழைக்கப்பட்ட துரோகங்களை
இக்கணம் எண்ணிக்கொண்டுமிருக்கலாம்.

சம்பந்தப் பட்டவர்கள்
சாலைகளைக் கடக்கையில்
பார்க்காமலா 
இருப்பார்கள்?

கண்டதும்
கண்ணில் துளிர்த்த
துளி கண்ணீரைத் தொட்டுணர்ந்தே
கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது
முற்றிலும் இயந்திரமாகிவிடாத 
இதயமிருப்பதை இன்னும். 


No comments: